Friday, September 12, 2025
Homeதமிழ்நாடுநல்லகண்ணு உடல் நலம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

நல்லகண்ணு உடல் நலம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலம் குறித்து விசாரித்த பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 22ம் தேதி, வீட்டில் கீழே விழுந்த காரணத்தால், சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலையிலும், இடது கை விரலிலும் காயம் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் CT SCAN அம்மருத்துவமனையிலேயே பரிசோதனையில் தலையில் உள்காயம் ஏதும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் 24ம் தேதி மாலை உணவு அருந்தும் போது உணவுக் குழாயில் புரையேறியதால், அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அதனால் மேல் சிகிச்சைக்காக, அன்று இரவு 10.30 மணி அளவில் இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழுவின் பரிந்துரைப்படி, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. உணவுப்பொருட்கள் சுவாசக் குழாயில் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு, Bronchoscopy மூலமாக உணவுக் துகள்கள் அகற்றப்பட்டது.

நோயின் தீவிர தன்மையை அறிந்து அவருக்கு Antibiotics மற்றும் பிற மருந்துகள் செலுத்தப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் 26ம் தேதி செயற்கை சுவாசம் நிறுத்தப்பட்டது. உறவினர்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் காணப்பட்டது.

நேற்று 27ம் தேதி இரவு வாயில் Secretion தேங்கியதால் மீண்டும் அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டது. எனவே, உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு, மேலும் மருத்துவக் குழுவின் அறிவுரைப்படி, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும், உடல்நிலை சீராக உள்ளது. இருப்பினும் கைதேர்ந்த மருத்துவ குழுவோடு சேர்ந்து கூடுதலாக மருத்துவர்கள் பரிந்துரை மற்றும் ஆலோசனைகளை பெறுவதற்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் நல்லகண்ணு ஐயா அவர்களை பரிசோதிக்க உள்ளனர். கூடுமானவரை அனைத்து முயற்சிகளையும் மருத்துவ நிர்வாகம் செய்து வருகிறது.

பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒரு வேண்டுகோள். 101 வயதை கடந்தவர். மிகப்பெரிய தலைவர். அவருக்கு இப்போது தேவையே, தேவையான சிகிச்சை அளிக்கும் நேரத்தில் தனிமை. அவரது உடல்நிலை அக்கறை கொண்டு விசாரிப்பது, குறிப்பாக நேரில் வந்து விசாரிப்பதை கைவிட வேண்டும். அவரது உடல்நிலை பற்றி தகவல் தெரிந்து கொள்ள மருத்துவமனைக்கு வெளியே உள்ள குழுவிடம், நல்லகண்ணு அவர்களின் உடல்நிலை பற்றி கேட்டு அறிந்து கொள்ளலாம். அவரை நேரில் பார்த்து நலம் விசாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments